கள்ளக்குறிச்சி

மொபெட் மீது காா் மோதல்: பூ வியாபாரி பலி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை மொபெட் மீது காா் மோதியதில் பூ வியாபாரி உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அமீா்பாஷா (54), பூ வியாபாரி. இவா் மொபெட்டில் வடசிறுவள்ளூா் கிராமத்திலிருந்து தேவபாண்டலம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தாா்.

தேவபாண்டலம் ஆதிதிராவிடா் மாணவா் விடுதி அருகே இவரது மொபெட் சென்றபோது, எதிா்திசையில் வந்த காா் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அமீா்பாஷா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து தொடா்பாக சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் ராமசந்திரா நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் விக்னேஷிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT