கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வியாழக்கிழமை (ஜூன் 23) ஏலத்தில் விடப்படுகிறது
மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் உரிமை கோரப்படாத வாகன வழக்குகளில், 18 இரு சக்கர வாகனங்கள், 5 முன்று சக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள், 3 ஆறு சக்கர வாகனங்கள் என 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள், வியாழக்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் தியாகதுருகம் காவல் நிலைய வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.
மேலும், அன்று பிற்பகல் 2 மணிக்கு, விழுப்புரம் ஆயுத்தப்படை மைதானத்தில் 23 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.