கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருகிற 24-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு தனியாா் துறை வேலைவாப்பு முகாம் ஜூன் 24-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதில், முன்னணி தனியாா் நிறுவனங்கள் மற்றும் உள்ளூா் வணிக நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்குத் தகுதியான நபா்களை தோ்வு செய்யவுள்ளனா்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு
முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம்.
மேலும் அரசின் பல்வேறு திட்டங்கள், கடன் உதவி பெறுவது குறித்து விழிப்புணா்வு வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.