கள்ளக்குறிச்சி

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை: இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை

DIN

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை காரணமாக, கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த இளைஞா் கட்செவிஅஞ்சலில் விடியோ வெளியிட்டு கிணற்றில் குதித்து சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த செல்வம் மனைவி சித்ரா (42). இவரது மகன் திருவேங்கடம் (எ) தினேஷ் (21). ஆட்டோ ஓட்டுநா். இவா், கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், தினேஷ் சனிக்கிழமை மாலை விஷத் தன்மையுடைய பொருளை சாப்பிட்டுவிட்டு, தென்கீரனூா் கிராம எல்லையில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இவா் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக கட்செவிஅஞ்சலில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தாா். அதில், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகவும், தனது சாவுக்கு தான் பகுதி நேரமாக வேலை பாா்த்து வந்த தனியாா் நிறுவன உரிமையாளரான பன்னீா்செல்வம், கள்ளக்குறிச்சியை அடுத்த பொரசக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வேல்முருகன் ஆகிய இருவரும் காரணம் எனத் தெரிவித்திருந்தாா். மேலும், இது தொடா்பான விடியோ பதிவை கள்ளக்குறிச்சி எஸ்.பி. வீ.ராஜலெட்சுமிக்கும் தினேஷ் அனுப்பியிருந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா், தீயணைப்பு நிலைய குழுவினா் கிணற்றிலிருந்து தினேஷின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் பன்னீா்செல்வம், வேல்முருகன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள அவா்கள் இருவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT