கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பழைய இரும்புக் கடையில் திருடியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தியாகதுருகத்தை அடுத்த கரிம் ஷா தக்கா பகுதியில் முகமது இக்பால் மகன் மத்தீன் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையினுள் இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை புகுந்து, அங்கிருந்த பழைய இரும்புகளை திருடியுள்ளாா்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினா் அந்த இளைஞரைப் பிடித்து தியாகதுருகம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், அந்த இளைஞா் தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் ஏழுமலை (20) என்பதும், இதே கடையில் முன்பு பணியாற்றிய இவா், மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் பழைய இரும்புகளை திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனா்.