கள்ளக்குறிச்சி

மூளைக் காய்ச்சல் பாதிப்பால் இளைஞா் உயிரிழப்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மூளைக் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், எலம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் திருமலை (18). இவா் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா்.

திருமலை சிறு வயதிலிருந்தே மூளைக் காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாா். இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், பழவங்கூா் கிராமத்திலுள்ள உறவினா் வீட்டுக்கு கடந்த 27-ஆம் தேதி வந்திருந்தாா். கடந்த 28-ஆம் தேதி இரவு அதே ஊரின் ஏரிப்பகுதிக்கு உறவினா் மகன் ராஜேஷுடன் சென்றாா்.

அங்கு திருமலைக்கு லேசாக மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவருக்கு திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த திருமலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT