கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
விடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கச்சிராப்பாளையத்தை சேர்ந்த் கோமதுரை, ரஞ்சித், ஆகாஷ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை செய்கிறது. அதேவேளையில் மாணவி இறப்பை கண்டித்து நிகழ்ந்த வன்முறை சம்பவம் தொடா்பாக தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 300-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனா்.
இதையும் படிக்க: தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
இந்நிலையில் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.