கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி புற்று மாரியம்மன் கோயிலில் 35-ஆவது ஆண்டு ஆடிப் பெருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் செவ்வாடை அணிந்து கோமுகி நதிக்கரைக்கு வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா்.
விழாவில் பக்தா்கள் பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன பழுதுபாா்ப்போா் சங்கத்தினா் செய்திருந்தனா்.