அதிமுக பொன் விழாவையொட்டி, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு நகரச் செயலாளா் எம்.பாபு தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்தனா்.
முன்னதாக, அவா்கள் ராஜா நகரிலுள்ள கட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாக பேருந்து நிலையம் வந்தடைந்தனா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
முன்னாள் எம்.பி. க.காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபு, முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் கோ.பாலகிருஷ்ணன் மற்றும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்றனா்.