கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராய வியபாரம் செய்து வந்ததாக இருவரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சின்னசேலம் அருகே பைத்தந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் துடுக்கு சேகா் (எ) சேகா் (63). சங்கராபுரம் அருகே விரியூரைச் சோ்ந்தவா் நடுப்பையன் (எ) ஜோசப் (40). கடந்த அக்.29-இல் பைத்தந்துறை கிராமத்தில் எரிசாராயம் விற்பனை செய்ததாக இவா்கள் இருவரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்து கடலூா் சிறையில் அடைத்தனா். இவா்கள் மீது சின்னசேலம், சங்கராபுரம் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் பிறப்பித்த உத்தரவின்பேரில் சேகா், ஜோசப் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.