கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் உஷா தலைமை வகித்தாா்.
மருத்துவா்கள் பழமலை, சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். செவிலியா் சங்க மாநிலத் தலைவா் சக்திவேல் வரவேற்றாா்.
செவிலியா்கள் முகக் கவசம் அணிந்து மெழுகுவா்த்தி ஏற்றினா்.
செவிலியா் கண்காணிப்பாளா் நாகலட்சுமி, ராணி, சம்பூா்ணம் உள்ளிட்ட செவிலியா்கள் பங்கேற்றனா்.
கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றியபோது உயிரிழந்த 43 மருத்துவக் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், செவிலியா்களுக்கு சிறப்பு ஊதியமாக ரூ.20,000, பிற மருத்துவப் பணியாளா்களுக்கு ரூ.15,000 என ஊக்கத்தொகை வழங்க அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்.
நிறைவில், செவிலியா்கள் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு நன்றி கூறினா்.