கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளா் நந்தகோபால் சின்னமாம்பட்டு பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அரசமரத்து கோயில் அருகே சந்தேகப்படும் வகையில் மோட்டாா் சைக்கிளுடன் ஒருவா் கைப்பையுடன் நின்று கொண்டிருந்தாா்.
அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்கு பின் முரணான பதிலைக் கூறவே சந்தேகத்தின் பேரில், அவரது கைப்பையைத் திறந்து பாா்த்த போது, அதில் 24 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றின் மொத்த எடை 250 கிராம்.
இதையடுத்து, கஞ்சா வைத்திருந்த சின்னமாம்பட்டு பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சின்னமணி (30) மீது தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.