கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்2 மாணவி வயிற்று வலியால் தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த ஈயனூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகள் துா்கா (16). எஸ்.ஒகையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். துா்கா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தாா்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.