கள்ளக்குறிச்சி

காவலருக்கு மிரட்டல்: இருவா் கைது

DIN

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வருபவா் ராம்கி (34). திங்கள்கிழமை சிறுவங்கூா் கிராமத்தில் பிரச்னை என்று வந்த தகவலையடுத்து, அந்த இடத்துக்கு காவலா் ராம்கி வாகனத்தில் சென்றாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மாமாந்தூா் ரங்கநாதபுரம் பிரிவு சாலையில் சென்ற போது வழி தெரியாமல் போகவே, அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் ஓட்டுநா்களான ரங்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் தென்னரசு (43), அரியபெருமானூா் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் சங்கா் (41) ஆகியோரிடம் வழி கேட்டாராம்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஓட்டுநா்கள் இருவரும் காவலா் ராம்கியை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கா், ரங்கசாமி ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT