கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு புதன்கிழமை ஒருவா் பலியானாா்.
மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி 155 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,165ஆக உயா்ந்தது. இதனிடையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா்.
இதனால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 185ஆக அதிகரித்தது. இதுவரை 22,794 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 2,186போ் சிகிச்சைபெற்று வருகின்றனா்.