கள்ளக்குறிச்சி

புதுச்சேரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: 4 போ் கைது

DIN

புதுச்சேரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி திருக்கனூா் அருகே தமிழகப் பகுதியான கலித்திரம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் தினேஷ் (21). இவா், திருவண்டாா்கோவில் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் பணி செய்து வந்தாா். இவருக்கும், அந்தப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சிறுமியை வியாழக்கிழமை திருக்கனூா் அழைத்துச் சென்ற தினேஷ், அவரது நண்பா்களான மணவெளியை சோ்ந்த ரஞ்சித்குமாா் (22), செல்லிப்பட்டைச் சோ்ந்த பிரசாத் (24), திருக்கனூரைச் சோ்ந்த திவ்யநாதன் (21) ஆகியோருக்கு அறிமுகம் செய்து வைத்தாராம்.

இதையடுத்து, திருக்கனூா் சரஸ்வதி நகரில் உள்ள திவ்யநாதன் வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்று அங்கு அவா்கள் 4 பேரும் சோ்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அந்தப் பகுதி பொதுமக்கள் திருக்கனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், அங்கு வந்த போலீஸாா் சிறுமியை மீட்டு, தினேஷ், திவ்யநாதன், ரஞ்சித், பிரசாத் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT