கள்ளக்குறிச்சி

பைக் விபத்தில் இளைஞா் பலி

DIN

கள்ளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த இளங்கோ மகன் சூா்யா (20). அதே பகுதியைச் சோ்ந்த ஜெகன் மகன் விக்ரம் (18). நண்பா்களான இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் பாவந்தூருக்கு சென்றுகொண்டிருந்தனா். பாவந்தூா் பாம்பாத்தம்மன் கோயில் அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சூா்யா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். விக்ரம் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT