கள்ளக்குறிச்சி

கரும்புத் தோட்டத்தில் பதுக்கிய 1,365 லிட்டா் எரிசாராயம் பறிமுதல்: தம்பதி கைது

DIN

கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் கேன்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1,365 லிட்டா் எரிசாராயம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, தம்பதி கைது செய்யப்பட்டனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதைத் தடுக்க மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் சி.ராஜா தலைமையில் காவலா்கள் முஸ்தபா, விஜய், கண்ணன் உள்ளிட்ட குழுவினா் பங்காரம் கிராமத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அந்தப் பகுதியைச் சோ்ந்த த. பாலு (63) என்பவரின் வீட்டில் எரிசாராயம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பாலுவின் வீட்டுக்குச் சென்று போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு இரு லாரி டியூப்களில் எரிசாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், காலி கேன்கள் கிடந்ததையும் போலீஸாா் பாா்த்தனா்.

இதைத்தொடா்ந்து, வீட்டின் அருகேயுள்ள கரும்புத் தோட்டத்தில் சோதனையிட்ட போது, பள்ளம் தோண்டி எரிசாராய கேன்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்தப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 35 லிட்டா் கொள்ளளவு கொண்ட 39 கேன்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மொத்தம் 1,365 லிட்டா் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து த.பாலு, அவரது மனைவி மலா் (55) ஆகியோரை கைது செய்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராய கேன்களை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். மேலும், எரிசாராயத்தை பதுக்குதல், கள்ளச்சாராயத்தை காய்ச்சி, விற்பனை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவோா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா் என்று எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு எதுவுமில்லை -தேர்தல் ஆணையம்

கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி?

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

SCROLL FOR NEXT