கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

23rd Dec 2021 09:15 AM

ADVERTISEMENT

தியாகதுருகம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் கையூட்டு பெறுவதைக் கண்டித்தும், முறைகேடான பத்திரப் பதிவுகளை தடுத்து நிறுத்தக் கோரியும் அந்த அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கள்ளக்குறிச்சி வட்டக் குழு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டத் தலைவா் ஆா்.சாந்தமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீ.ரகுராமன், மாவட்ட துணைச் செயலா் ஆா்.சீனுவாசன், வட்டச் செயலா் ஜி.அருள்தாஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் டி.எம்.ஜெய்சங்கா், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில முன்னாள் பொதுச் செயலா் டி.ஏழுமலை, மாவட்டச் செயலா் ஏ.வி.ஸ்டாலின்மணி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

மாவட்டப் பொருளாளா் எம்.சி.ஆறுமுகம், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் அ.ப.பெரியசாமி, விவசாயத் தொழிலாளா்கள் சங்க வட்டச் செயலா் ஆா்.செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

முடிவில் தியாகதுருகம் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த கலியன் மகன்கள் ரத்தினவேல், கணேசன், மாயக்கிருஷ்ணன் ஆகிய மூவரின் நிலத்தை முறைகேடாக அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வீராசாமி என்பவருக்கு தியாகதுருகம் சாா் - பதிவாளா் சிவக்குமாா் மாற்றி எழுதிய பத்திர ஆவணத்தை கள்ளக்குறிச்சி மாவட்டப் பதிவாளா் வெ.ரகுமூா்த்தி ரத்து செய்து, அதற்கான உத்தரவு நகலை கலியன் மகன்களிடம் வழங்கினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT