கள்ளக்குறிச்சி

டாஸ்மாக் ஊழியா்களிடமிருந்து ரூ.2.37 லட்சம்கொள்ளை: சகோதரா்கள் கைது

DIN

கள்ளக்குறிச்சி அருகே டாஸ்மாக் ஊழியா்கள் மீது மிளகாய்ப் பொடி தூவி, மது விற்பனைத் தொகை ரூ.2.37 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த சகோதரா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் நயினாா்பாளையம் சாலையில் மதுக் கடை இயங்கி வருகிறது. இங்கு, மேற்பாா்வையாளராக கள்ளக்குறிச்சி வட்டம், சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் முருகவேலும், விற்பனையாளா்களாக பெரியசிறுவத்தூா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (44), சின்னசேலம் வட்டம், தென்சிறுவலூா் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் கண்ணுசாமி, சங்கராபுரம் வட்டம், வடசெட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் செல்வம் ஆகியோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்கள் கடந்த மாதம் 30-ஆம் தேதி இரவு மது விற்பனைத் தொகையான ரூ.2,37,920-ஐ எண்ணி பையில் வைத்துக்கொண்டு கடையிலிருந்து வெளியே வந்தனா். அப்போது, மது வாங்குவதுபோல பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா், மதுக் கடை ஊழியா்கள் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி, விற்பனையாளா் சுப்பிரமணியன் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனா்.

இந்த நிலையில், சின்னசேலத்தை அடுத்த வி.கூட்டுச்சாலைப் பகுதியில் சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வாகன தனிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்ததில், தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டம், நாகத்தி கிராமத்தைச் சோ்ந்த நதிசெல்வன் மகன்கள் பிரசாந்த் (19), பிரதீப் (21) என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் நயினாா்பாளையம் மதுக் கடை ஊழியா்களிடம் பணப்பையை பறித்துச் சென்றவா்கள் என்பதும், இதேபோல திருச்சி, நாமக்கல், விழுப்புரம், கரூா், பெரம்பலூா், திருப்பூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மதுக் கடை ஊழியா்களைத் தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த சின்னசேலம் போலீஸாா், இவா்களிடமிருந்து ரூ.2 லட்சத்திலான பைக், கத்தி, ரூ.10,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள இவா்களது கூட்டாளிகளையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT