கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிதிருவரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா விடுத்த செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, ஆதிதிருவரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.