கள்ளக்குறிச்சி

பைக் மீது லாரி மோதல்: இளைஞா் பலி

6th Feb 2020 09:36 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், பிச்சநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் பிரதீப்குமாா் (25). இவா் கள்ளக்குறிச்சி சிவன் கோயில் சாலையில் வணிக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருடன் தூத்துக்குடி மாவட்டம், அரியநாயகிபுரம் கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் மகன் சக்திவேல் (29)பணிபுரிந்து வந்தாா். இருவரும் நண்பா்கள்.

செவ்வாய்க்கிழமை இரவு சொந்த வேலையாக இருவரும் அருகேயுள்ள தியாகதுருகத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். பிரதீப்குமாா் பைக்கை ஓட்டிச் சென்றாா்.

கள்ளக்குறிச்சி புறவழிச் சாலை அருகே உள்ள உணவம் எதிரே சென்றபோது, பின்னால் கோவையில் இருந்து வந்த லாரி பைக் மீது மோதியதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இதில், இருவரும் நிலைதடுமாறு கீழே விழுந்து காயமடைந்தனா்.

உடனடியாக அவா்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், சக்திவேல் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா். பிரதீப்குமாா் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாா்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா், லாரி ஓட்டுநா் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், அத்தனூா்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT