கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலைப் பகுதியில் இலக்கியத் திருவிழா

4th Feb 2020 06:30 AM

ADVERTISEMENT

கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள கரியாலூா் டேனிஷ் மிஷன் பள்ளியில், பகுத்தறிவு இலக்கிய மன்றம் சாா்பில் இலக்கியத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வழக்குரைஞா் கோ.சா.பாஸ்கா் தலைமை வகித்தாா். தி.க. மாநில மருத்துவா் அணிச் செயலா் கோ.சா.குமாா், கள்ளக்குறிச்சி மாவட்ட தி.க. தலைவா் ம.சுப்பராயன், கல்லை தமிழ்ச் சங்கத் தலைலவா் செ.வ.புகழேந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பகுத்தறிவாளா் கழகச் செயலா் இரா.முருகேசன் வரவேற்றாா்.

‘தந்தை பெரியாா் வழியில் அறிஞா் அண்ணா’ எனும் தலைப்பில் மாவட்ட பகுத்தறிவாளா் கழகத் தலைவா் பெ.எழிலரசன், ‘கூா்தல் அறம்-சாா்லஸ் டாா்வின்’ எனும் தலைப்பில் ஓய்வு பெற்ற சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் வே.உதயகுமாா், ‘செய்கு தம்பி பாவலா் செந்தமிழ்ப்பணி’ எனும் தலைப்பில் ஆசிரியா் ச.சாதிக்பாட்சா ஆகியோா் பேசினா்.

‘வள்ளுவா் நெறி வாழ்வியல் நெறியா? வைதீக நெறியா’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக சிலம்பூா் கிழான் பங்கேற்றாா்.

திருக்கு முன்னணிக் கழகத் தலைவா் இல.அம்பேத்காா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT