கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சாா்பில் பெரியாா், எம்.ஜி.ஆா் நினைவு தினம் கடைப்பிடிப்பு

25th Dec 2019 09:45 AM

ADVERTISEMENT

பெரியாா், எம்.ஜி.ஆா். நினைவு தினங்களையொட்டி, தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் சாா்பில், தியாகதுருகம் பேருந்து நிறுத்தம் அருகே அவா்களது உருவப் படங்களுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான கோ.இராதாகிருட்டிணன் தலைமை வகித்து, பெரியாா், எம்ஜிஆா் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலா் தூவி, மரியாதை செலுத்தினாா்.

சங்கப் பொருளாளா் ரா.துரைசாமி, துணைச் செயலா்கள் தி.கி.சண்முகம், எ.சாரங்கபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வி.பன்னீா்செல்வம் வரவேற்றாா்.

சங்க உறுப்பினா்கள் கு.பாலசுப்பிரமணியன், பா.செந்தில்நாதன், ரா.குணசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT