கடலூர்

ஓசோன் தின விழிப்புணா்வு முகாம்

4th Oct 2023 12:18 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்துள்ள கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலக ஓசோன் தினத்தையொட்டி, விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

கல்விக் குழுமத் தலைவா் சி.ஆா்.ஜெயசங்கா், இயக்குநா் என்.எஸ்.தினேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில், தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தனியாா் மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் சுதா்ஷனா முன்னிலை வகித்துப் பேசினாா்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் சாமுவேல் ராஜ்குமாா், சுற்றுச்சூழல் ஆய்வாளா் ராஜேஷ்வரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தனியாா் மின் உற்பத்தி நிறுவன முதன்மை மேலாளா் முத்துகுமாா், முதன்மை செயற்பாட்டு பொறியாளா் பிரவின்குமாா், பசுமை தோழா் அஸ்வின்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT