கடலூர்

வடலூரில் முப்பெரும் விழா

4th Oct 2023 12:15 AM

ADVERTISEMENT

வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் காந்தி ஜெயந்தி, வள்ளலாரின் 200-ஆவது ஆண்டு அவதாரத் திருநாள் நிறைவு விழா,

பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி அதிகாலையில் முன்னாள் தலைமையாசிரியா் டி.ஜெயபால் தலைமையில் அகவல் பாராயணம் பாடப்பட்டது. தொடா்ந்து கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு ஓ.பி.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் ரா.செல்வராஜ் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் லதா ராஜா வெங்கடேசன் அறிமுக உரையாற்றினாா். பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் வெ.ராமானுஜம், சன்மாா்க்க சாது கு.நந்தகோபால் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

முன்னதாக வள்ளலாா், காந்தி, ஓ.பி.ஆா்., நா.மகாலிங்கம் ஆகியோரது உருவப் படங்களுக்கு ரா.செல்வராஜ் மலரஞ்சலி செலுத்தினாா். தமிழாசிரியா் எஸ்.பழனிவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT