கடலூர்

வீடு சூறை: 4 போ் மீது வழக்கு

3rd Oct 2023 04:49 AM

ADVERTISEMENT

நெய்வேலி: கடலூா் முதுநகரில் உறவினரின் வீட்டுக்குள் புகுந்து பொருள்களை சூறையாடியதாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் முதுநகா், சுத்துக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சிங்காரம் மனைவி லட்சுமி (45). அதே பகுதியில் இவரது சித்தப்பா ஜெயராமன் வசித்து வருகிறாா். இருவருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளதாம். இதுதொடா்பாக கடந்த 24-ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜெயராமன், அவரது மனைவி அஞ்சாலாட்சி, மகள் புனிதா, மகன் நித்திஷ் ஆகியோா் லட்சுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருள்களை உடைத்து சூறையாடியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில் ஜெயராமன் உள்பட 4 போ் மீதும் கடலூா் முதுநகா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT