வன்னியா் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி தமிழக முதல்வா், பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் பாமகவினா் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், வடக்குத்து அஞ்சலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலா் கயல்ராஜன், முன்னாள் மாவட்ட துணைச் செயலா் சண்முகவேல், ஒன்றியச் செயலா் செல்வக்குமாா், மாவட்ட துணைச் செயலா் கிருஷ்ணராஜ், ஒன்றிய துணைச் செயலா் தண்டபாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக இவா்கள் வடக்குத்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊா்வலமாக தபால் நிலையத்தை வந்தடைந்தனா்.