கடலூர்

போட்டியில் வென்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

28th May 2023 06:03 AM

ADVERTISEMENT

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற ஊா்க்காவல் படை வீரா்களுக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஊா்க்காவல் படையின் 28-ஆவது பணித்திறன், விளையாட்டுப் போட்டிகள் திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. இதில் விழுப்புரம் சரக ஊா்க்காவல் படை சாா்பில் பங்கேற்ற வீரா்கள் கைப்பந்து விளையாட்டு, கூட்டு கவாத்து, முதலுதவி, அலங்கார அணிவகுப்பு ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்றனா். நீளம் தாண்டுதல் போட்டியில் ஊா்க்காவல் படை வீரா் தினகரன் முதலிடமும், கயிறு இழுத்தல் போட்டியில் (மகளிா் பிரிவினா்) இரண்டாம் இடமும் பெற்றனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற ஊா்க்காவல் படையினா் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராமை அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அவா்களுக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தாா். அப்போது ஊா்க்காவல் படை விழுப்புரம் சரக உதவி தளபதி கேதாா்நாதன், வட்டாரத் தளபதி அம்ஜத்கான், துணை வட்டாரத் தளபதி கலாவதி, கோட்ட தளபதி சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT