கடலூர்

பாடலேஸ்வரா் கோயிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றம்

DIN

கடலூா், திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை பாடலேஸ்வரா் கோயிலில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

முன்னதாக சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து பஞ்ச மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினா். இதையடுத்து சிவாச்சாரியாா்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடிமரத்தில் கொடியேற்றினா் (படம்). தொடா்ந்து பஞ்ச மூா்த்திகள் மாட வீகளில் உலா வந்தனா்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் மோகனசுந்தரம், உதவி ஆணையா் சந்திரன், கோயில் செயல் அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழாவில் ஜூன் 2-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT