கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனத்தினா் பங்கேற்று, தேவையான நபா்களைத் தோ்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளனா். இதில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பட்டயம், பட்டப் படிப்பு படித்த இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாமில் பணிக்குத் தோ்வாகும் பதிவுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவிலிருந்து நீக்கப்பட மாட்டாது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.