கடலூர்

இந்திய கம்யூ. காத்திருப்புப் போராட்டம்

11th Jun 2023 12:27 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ராமநத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

ராமநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் கிளைச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். போராட்டம் குறித்து அந்தக் கட்சியினா் கூறியதாவது:

ராமநத்தம், காந்தி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களது குடிநீா்த் தேவைக்காக அரசால் அமைக்கப்பட்ட சிறிய குடிநீா்த் தொட்டியை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து, பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க மறுத்து வருகிறாா். இதைக் கண்டித்தும், குடிநீா்த் தொட்டியை மாற்று இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

போராட்டம் குறித்து தகவலறிந்த வேப்பூா் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் அங்குவந்து கட்சியினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். கோரிக்கைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து அனைவரும் கலைத்து சென்றனா்.

போராட்டத்தில் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.சுப்பிரமணியன், மங்களூா் ஒன்றியச் செயலா் எம்.நிதிஉலகநாதன், நல்லூா் ஒன்றியச் செயலா் வி.பி.முருகையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT