கடலூர்

வள்ளலாா் பன்னாட்டு கருத்தரங்கு நாளை தொடக்கம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை, வடலூா் வள்ளலாா் கல்விப் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து ‘வள்ளலாா்-200’ என்றத் தலைப்பில் நடத்தும் 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கு சனிக்கிழமை (ஜூன் 10 ) தொடங்குகிறது.

கருத்தரங்கு தொடக்க விழா பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் காலை 8.45 மணியளவில் நடைபெறுகிறது. கலைப்புல முதல்வா் கே.விஜயராணி தலைமை வகித்து பேசுகிறாா். பல்கலைக்கழக பதிவாளா் (பொ) இரா.சிங்காரவேல் தொடக்க உரையாற்றுகிறாா். கோவை சிவப்பிரகாச சுவாமிகள் கருத்துரையும், மலேசிய மருத்துவா் செல்வ மாதரசி சிறப்புரையும் ஆற்றுகின்றனா்.

கருத்தரங்க நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) மாலை நடைபெறுகிது. இதில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சிறப்புரையாற்றுகிறாா். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தலைமை உரையாற்றி ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பை வெளியிடுகிறாா். தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி.திருவள்ளுவன் நிறைவுரையாற்றுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT