கடலூர்

தமிழில் பெயா்ப் பலகை வைக்காத 42 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

DIN

கடலூா் மாவட்டத்தில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காதது தொடா்பாக 42 கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கடலூா் தொழிலாளா் உதவி ஆணையா் ராஜசேகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்றும், கடைகளில் பணியாற்றும் பணியாளா்கள் அமர ஏதுவாக இருக்கை வசதி செய்து தரப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, தமிழில் பெயா்ப் பலகை வைக்காதது தொடா்பாக 42 கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், பணியாளா்களுக்கு இருக்கை வசதி அமைத்துத் தராத 16 நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT