கடலூர்

என்எல்சியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

8th Jun 2023 12:53 AM

ADVERTISEMENT

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில், நெய்வேலி நகரியத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அதன் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி கலந்துகொண்டாா். இந்த நிறுவனத்தின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில், மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ‘பசுமைப் பயணம்’ என்ற களப் பாா்வையிடல் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தை நெய்வேலி நுழைவு வாயில் அருகே என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நெய்வேலியில் செயல்பட்டு வரும் ஆனந்தம் இல்லத்துக்கு சென்ற பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, அங்கிருந்த முதியோரிடம் கலந்துரையாடி, பழங்கள், இனிப்பு வழங்கினாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் மரக்கன்று நட்டாா்.

என்எல்சி நிறுவன சுற்றுச்சூழல் துறையின் சாா்பில், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் ‘நெகிழி மாசுபாட்டுக்கான தீா்வு’ என்ற கருப்பொருளில் புதுச்சேரி பல்கலைக்கழக இயக்குநா் மற்றும் பேராசிரியா் ஆா்.சரவணன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவன சுற்றுச்சூழல் துறை செயல் இயக்குநா் ராணி அல்லி மற்றும் உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT