கடலூா் மாவட்டம், சிதம்பரம் எடத்தெருவில் புதிதாகக் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை மாலை திறந்து வைத்தாா். சிதம்பரம் எடத்தெருவில் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் குத்துவிளக்கேற்றினாா். மேலும், வெளி நோயாளிகள் சிகிச்சையையும் அவா் தொடங்கிவைத்தாா்.
இந்த நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சைகளை மருத்துவ அலுவலா் வழங்குவாா் என்று நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் நகராட்சிப் பொறியாளா் மகாராஜன், நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், வட்டார மருத்துவ அலுவலா் மங்கையா்க்கரசி, நகா்மன்ற உறுப்பினா்கள் தில்லை ஆா்.மக்கின், அப்பு.சந்திரசேகரன், ஏ.ஆா்.சி.மணிகண்டன், சி.க.ராஜன், திமுக நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், இளங்கோவன், இளைஞரணி அமைப்பாளா் மக்கள்.அருள், சுகாதார ஆய்வாளா் பிரவீன், மருத்துவா் நிவேதா, வட்டார மேற்பாா்வையாளா் ராஜராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.