கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள உணவகத்தில் சாம்பாா் கேட்டு ரகளையில் ஈடுபட்டவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம் - கடலூா் சாலையில் சிவக்குமாா் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உணவகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியாா் நகரைச் சோ்ந்த துரைசாமி மகன் பாலமுருகன் (47) வந்து இலவசமாக சாம்பாா், குடிநீா் புட்டி கேட்டாராம். கடை உரிமையாளா் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த பாலமுருகன் அங்கிருந்த சைக்கிளை தூக்கிப்போட்டு உடைத்து, ரகளையில் ஈடுபட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலமுருகனை திங்கள்கிழமை கைது செய்தனா்.