கடலூர்

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடி இருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

திட்டக்குடி வட்டம், கீழகல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (69). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் அந்தக் கிராமத்திலுள்ள ரவிச்சந்திரனின் விவசாய நிலத்துக்குச் சென்றாராம். அப்போது, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்த பெரியசாமி, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT