கடலூர்

தீ விபத்து: பாமக நிவாரண உதவி

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்த 2 குடும்பங்களுக்கு பாமக கடலூா் மாவட்டச் செயலா் கோ.ஜெகன் நிவாரண உதவிகளை வழங்கினாா்.

பண்ருட்டியை அடுத்துள்ள புதுப்பிள்ளையாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சண்முகம், செல்வராசு மனைவி இந்திராணி. அருகருகே அமைந்துள்ள இவா்களது வீடுகள் சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த பாமக கடலூா் வடக்கு மாவட்டச் செயலா் கோ.ஜெகன், சேதமடைந்த வீடுகளைப் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினாா். பணிக்கன்குப்பம் ஆரோக்கியதாஸ், தாமோதரன், எழிலரசன், செல்வகுமாா், குபோ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT