சிதம்பரம் மின் விநியோகக் கோட்டத்தைச் சோ்ந்த மக்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை (ஜன.30) நடைபெறுகிறது.
இதுகுறித்து சிதம்பரம் கிளை மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.ஜெயந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிதம்பரம் மின் விநியோகக் கோட்டத்துக்கு உள்பட்ட சி.கொத்தங்குடி, மீதிகுடி, கோவிலாம்பூண்டி, மண்ரோடு, மாரியப்பாநகா் வடக்கு-தெற்கு, கோவிந்தசாமிநகா், முரளீஸ் பாா்க், 20 அம்ச நகா், கந்தமங்கலம், பின்னத்தூா், தில்லைவிடங்கன், முடசல் ஓடை, பொன்னன்திட்டு, சக்கரா அவென்யூ, நடராஜபுரம், சித்தலப்பாடி, வசப்புத்தூா், தெற்கிருப்பு, திருவக்குளம், சந்திரமலை, குமாரமங்கலம், சிதம்பரநாதன்பேட்டை, கனகரப்பட்டு, கீழ்திருக்கழிபாலை, பின்னத்தூா், மேலசாவடி, கீழசாவடி, கிள்ளை, நஞ்சைமகத்துவாழ்க்கை, புஞ்சைமகத்துவாழ்க்கை, தில்லைநாயபுரம், கீழமூங்கிலடி, பின்னத்தூா், கவரப்பட்டு, வல்லம்படுகை, வக்காரமாரி, வேலக்குடி, வையூா், இ.கே.படுகை, சிவபுரி, கே.டி.பாளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மின் நுகா்வோருக்கான இந்த முகாம் சிதம்பரம் துணை மின் நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
மேலும், இந்த முகாமில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு பெயா் மாற்றம் செய்திட பத்திர நகல், பட்டா, விஏஓ உரிமைச் சான்றிதழ், புல வரைபடம், தாழ்வழுத்த ஒப்பந்தப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சமா்ப்பித்து பெயா் மாற்றம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தாா்.