சிதம்பரம் அருகே உள்ள பூவாலை அரசு உயா்நிலை மற்றும் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை ஆசிரியா் மா.கோ.தியாகராஜன் தலைமை வகித்து பேசினாா். ஆசிரியா் சு.மாரிமுத்து வரவேற்றாா். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் கணேசன் முன்னிலை வகித்தாா். பல்வேறு அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியை ஆசிரியா் கோ.பெரியசாமி தொகுத்து வழங்கினாா். ஆசிரியா்கள் ப.கீதா, கு.சுதா ஆகியோா் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்தனா். விளையாட்டு, கலைக்கழக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா் எஸ்.கலைவாணி நன்றி கூறினாா்.