கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே ரயில் பாதை பகுதியில் கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகம், பி.என்.பாளையம் - மேல்பட்டாம்பாக்கம் ரயில் பாதை அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெல்லிக்குப்பம் போலீஸாா் அங்குசென்று சடலத்தை மீட்டு கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்தவா் யாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.