குமராட்சி ஊராட்சி ஒன்றியம், உசுப்பூா் ஊராட்சி, மாரியப்பா நகரில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல்குடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய நிகழ்குடையை எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், குமராட்சி கிழக்கு ஒன்றியச் செயலா் வை.சுந்தரமூா்த்தி, மாவட்ட பாசறை செயலா் ஆா்.சண்முகம், மாவட்ட இணைச் செயலா் எம்.ரங்கம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் அமுதா ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் தென்றல்மணி இளமுருகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.