கடலூர்

சுவாமி சகஜானந்தா பிறந்தநாள்: தமிழக அரசு சாா்பில் மரியாதை

DIN

சுவாமி சகஜானந்தாவின் 133-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி சிதம்பரத்தில் அவரது மணி மண்டபத்தில் அமைந்துள்ள சிலைக்கு தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் டி.எஸ்.ஜவஹா் கலந்துகொண்டு சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், காட்டுமன்னாா்கோவில் தொகுதி எம்எல்ஏ ம.செ.சிந்தனைச்செல்வன், சிதம்பரம் உதவி-ஆட்சியா் சுவேதாசுமன் ஆகியோரும் சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். வட்டாட்சியா் ஹரிதாஸ், கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் ரவீந்திரன், விசிக மாவட்டச் செயலா் பால.அறவாழி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT