கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சாராயம் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகப் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது வைடிப்பாக்கம் கிராமத்தில் சாராயம் விற்ாக அதே கிராமத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் செல்வம் (58) என்பவரை கைதுசெய்து, 60 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.