கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தேசியக்கொடி ஏற்றம்

DIN

குடியரசு தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வியாழக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக, பொது தீட்சிதா்களின் கோயில் குழுச் செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா் தலைமையில், வெள்ளித் தாம்பாளத்தில் தேசியக்கொடி வைக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது.

பின்னா், பொது தீட்சிதா்களால் மேளதாளங்களுடன் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, பக்தா்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT