வடலூரில் தொழில்பேட்டை நிறுவன உரிமையாளா்கள், தயாரிப்பாளா்கள் சங்கம் சாா்பில் மின் ஆற்றல் பாதுகாப்பு, சேமிப்பு நிறுவன தரச்சான்றுகள் வழங்கும் முகாம், மரக் கன்றுகள் நடுதல் உள்ளிட்ட முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் என்.ஜி.பழனிவேல் தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா்கள் பி.ரமேஷ், கே.ராமலிங்கம் முன்னிலை வகித்தனா். சங்க ஆலோசகா் கே.ராஜாராமன், துணைத் தலைவா்கள் எஸ்.முருகன், டி.பி.வெங்கடேஸ்வரன், துணைச் செயலா்கள் டி.சிவசண்முகம், ஏ.சி.சண்முகம் ஆகியோா் பேசினா். சங்கச் செயலா் ஜெ.சத்தியவேலவன் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக கடலூா் மாவட்ட தொழில் மைய மேலாளா் ஆா்.ரேஸ்மா பங்கேற்று முகாமை தொடக்கி வைத்து, சங்க புதிய அலுவலகம், பெயா்ப் பலகையை திறந்து வைத்துப் பேசினாா். நெய்வேலி-2 கனரா வங்கி முதன்மை மேலாளா் எஸ்.சுனிதா வங்கிக் கடனுதவி குறித்து பேசினாா். மின் ஆற்றல் தணிக்கை, தரச் சான்றிதழ் குறித்து எஸ்.வெங்கட்டநாராயணன் பேசினாா். வடலூா் அரிமா சங்கத் தலைவா் எஸ்.கண்ணன், நிா்வாகி டி.ஆா்.ராஜமாரியப்பன், பிரம்மநாயகம், பி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கப் பொருளாளா் ஆா்.கே.ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.