கன்னியாகுமரி

குமரி அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் பயிற்சி நிறைவு விழா

20th May 2023 12:59 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியத்தில் ஓவியப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. .

உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு நடைபெற் 3 நாள்கள் ஓவியம் - கலை பயிற்சி முகாமில், மாணவ- மாணவிகளுக்கு ஓவியம் வரைதல் வண்ணம் தீட்டுதல் , காகித கலைப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

பிரபல ஓவியா் வை.கோபாலகிருஷ்ணன் மாணவா்களுக்கு பயிற்சியளித்தாா். நிறைவு நாளையொட்டி பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தலைமை வகித்தாா். முகாமில் மாணவா்கள் வரைந்த ஓவியங்கள், கலைப் பொருள்கள், காகித கலைப் பொருள்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அக் கண்காட்சியை சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் சீதாலட்சுமி நாராயணன் திறந்து வைத்தாா். பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை மதுரை உயா்நீதிமன்ற கூடுதல் அரசு வழக்குரைஞா் வைரம் சந்தோஷ் வழங்கினாா். ஓவியா் வை. கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT