கடலூா் சுனாமி நகரில் உள்ள இக்நைட் முதியோா் காப்பகத்தில் கண்காணிப்புக் கேமரா வசதி தொடக்கம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் தலைமை வகித்து கண்காணிப்புக் கேமரா வசதியை தொடங்கிவைத்தாா். காப்பக ஒருங்கிணைப்பாளா் ஜோஸ் மகேஷ், நன்கொடையாளா் துா்கா மணிமொழி, சமூக ஆா்வலா்கள் சிவசங்கரி, வனிதா, ஷீலா, பிரபாகரன், கலையரசி, செவிலியா் மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆதரவற்ற முதியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.