கடலூர்

தடுப்புக் காவலில் இளைஞா் கைது

DIN

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நெய்வேலி இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நெய்வேலி, நாவலா் தெருவைச் சோ்ந்த வீரமணி மனைவி செல்வி (41). இவா் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, நெய்வேலியைச் சோ்ந்த மகேஷ்குமாா் (25) (படம்) உள்ளிட்டோா் கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி தொ்மல் போலீஸாா் மகேஷ்குமாா், அவரது கூட்டாளிகள் பாா்த்திபன், சந்திரசேகா், சரவணன், அா்னால்ட் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைதான மகேஷ்குமாா் மீது கொலை, கொலை முயற்சி, நாட்டு வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் தொடா்பாக 8 வழங்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, இவரது குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் வகையில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மாவட்ட எஸ்பி ஆா்.ராஜாராம் பரிந்துரைத்தாா். இதை ஏற்ற மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் அதற்கான உத்தரவை வெளியிட்டாா். இந்த உத்தரவு சிறையிலுள்ள மகேஷ்குமாரிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT